உள்ளூர் செய்திகள் (District)

மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி

Published On 2023-05-19 07:55 GMT   |   Update On 2023-05-19 07:55 GMT
  • நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்
  • மெஷினை சரி செய்த போது விபரீதம்

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐ ய்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48). இவர் தனக்கு சொந்த மான இடத்தில் பாக்கு மட்டை தயாரிப்பு தொழில் செய்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு பாக்கு மட்டை தயாரிக்கும் மெஷின் பழுதடைந்துள்ளது. இதனால் பழுதடைந்த மெஷினை சரி செய்வதற் காக நாமக்கல் மாவட்டம் சூளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார்(40) என்பவரை நேற்று ஐப்பேடு கிராமத்திற்கு அழைத்து வந்தார்.

அப்போது பாக்கு மட்டை தயாரிப்பு மெஷினை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் சரிசெய்து கொண்டிருந்தார். மெஷினை சரி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அதிலிருந்த மின் சாரம் ரமேஷ் குமாரை தாக்கியது.

இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரமேஷ் குமார் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சோளிங்கர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மெக்கானிக் சுரேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News