உள்ளூர் செய்திகள்
காவேரிப்பாக்கத்தில் நாளை மின் நிறுத்தம்
- பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது
- 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்
நெமிலி:
காவேரிப்பாக்கம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட செல்லும் வேகாமங்கலம், திருப்பாற்கடல், சக்கரமல்லூர், தர்மநீதி, ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.
இதற்காக திருப்பாற்கடல், அத்திப்பட்டு, வேகாமங்கலம், மாமண்டூர், சாத்தம் பாக்கம், திருமலைச்சேரி, எசையனூர், வளவனூர், புத்தேரி, அனந்தாங்கள் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என காவேரிப்பாக்கம் உதவி செயற் பொறியாளர் துரைசங்கர் தெரிவித்தார்.