உள்ளூர் செய்திகள்

வருகிற 15-ந் தேதி மின் நிறுத்தம்

Published On 2023-06-13 10:08 GMT   |   Update On 2023-06-13 10:08 GMT
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தடை
  • மின் அதிகாரி தகவல்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை துணை மின் நிலையத்தில் வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராணிப்பேட்டை நகரம், முத்துக்கடை, ஆட்டோ நகர்,வீ.சி.மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு ரோடு,காந்தி நகர், மேல் புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிகுளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இத்தகவலை ராணிப்பேட்டை மின்வாரிய அலுவலக செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News