உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 தேர்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடம்

Published On 2023-05-08 08:06 GMT   |   Update On 2023-05-08 08:06 GMT
  • ஒரு இடம் முந்தியது வேலூர்
  • திருவண்ணாமலை மாவட்டம் 35-வது இடத்தையும், திருப்பத்தூர் மாவட்டம் 29-வது இடத்தையும் பிடித்துள்ளது

ராணிப்பேட்டை:

வேலூர் மாவட்டத்தில் 7,248 மாணவர்கள் 8,098 மாணவிகள் உள்பட 15,346பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.

இதில் 6094 மாணவர்கள் 7595 மா ணவர்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 689 பேர் தேர்ச்சி அடைந்தனர்.

இதன் மூலம் வேலூர் மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் 89.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலில் உள்ள கைதிகள் 6 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 3 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 865 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.இதில் 25,022 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 89.8 சதவீதமாக உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 116 பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 13 ஆயிரத்து 314 மாணவ, மாணவிகள் 63 மையங்களில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 623 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 87.3 சதவீதம் ஆகும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 13,014 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.இதில் 11,860 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 91.13 சதவீதமாக உள்ளது.

பிளஸ்-2 பொதுத் தேர்வில் ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக அளவில் கடைசி இடத்தை பிடித்தது. வேலூர் மாவட்டம் கடைசி இடத்திற்கு முன்பாக

3 7-வது இடத்தை பிடித்தது.

திருவண்ணாமலை மாவட்டம் 35-வது இடத்தையும், திருப்பத்தூர் மாவட்டம் 29-வது இடத்தையும் பிடித்துள்ளது.

Tags:    

Similar News