உள்ளூர் செய்திகள் (District)

ஏரியில் ஆண் பிணம் மீட்பு

Published On 2022-12-27 09:20 GMT   |   Update On 2022-12-27 09:20 GMT
  • எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை
  • போலீசார் விசாரணை

சோளிங்கர்:

சோளிங்கர் பெரிய ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தண்ணீரில் மிதப்பதாக சோளிங்கர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது‌.

அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நபர் யார் அவரை கொலை செய்து இங்கே வீசி சென்றனரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News