உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ரேசன்கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த அறிவிப்பு- மாற்று ஏற்பாடு செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவு

Published On 2022-06-10 18:17 GMT   |   Update On 2022-06-10 18:17 GMT
  • 13-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு
  • வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை.

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடை பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அத்தியாவசிய உணவுப் பொருள்கள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

வருகிற 13-ம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ரேசன் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், போராட்டத்தின் போது பொதுமக்கள் பாதிக்காதவாறு இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் பணிக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு "NO WORK NO PAY" என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News