உள்ளூர் செய்திகள் (District)

நெல்லையில் அரசு பள்ளியை சொந்த செலவில் சீரமைத்த ரெட்டியார்பட்டி நாராயணன்

Published On 2023-07-15 09:07 GMT   |   Update On 2023-07-15 09:07 GMT
  • ரெட்டியார்பட்டியில் அரசு பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
  • முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் தனது சொந்த செலவில் பள்ளிக்கு தரை தளம் அமைத்து கொடுத்தார்.

நெல்லை:

பாளை ஒன்றியம் ரெட்டியார்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தரை தளம் மோசமாக காணப்பட்டதை அறிந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் தனது சொந்த செலவில் தரை தளம் அமைத்து கொடுத்து அதனை பார்வையிட்டு உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுத்தார். இதற்காக பள்ளி மாணவர்கள் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News