உள்ளூர் செய்திகள்

கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2023-01-02 10:13 GMT   |   Update On 2023-01-02 10:13 GMT
  • நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை தொடர்ந்து உயர்ந்தது.
  • அணைக்கு வினாடிக்கு 609 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

ஈரோடு

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.

105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை தொடர்ந்து உயர்ந்தது.

இந்நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.66 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 609 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று வரை கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 1800 கன அடியாக குறைக்கப்பட்டு ள்ளது.

தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும் பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 100 கன அடியும் என மொத்தம் பவானிசாகர் அணையிலி ருந்து 2,700 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News