உள்ளூர் செய்திகள் (District)

மாணவர்களுக்கு சான்றிதழ், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்

Published On 2023-08-07 09:15 GMT   |   Update On 2023-08-07 09:15 GMT
  • மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
  • முகாமில் மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜப்பா கலந்து கொண்டு பேசினார்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் திருத்துறைப்பூண்டி பகுதி பள்ளியில் உள்ள நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களு க்கான தலைமை பண்பு மற்றும் புத்தாக்க பயிற்சி முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

நூற்றாண்டு லயன்ஸ் சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் சிவகுருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார்.

முகாமில் மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜப்பா கலந்து கொண்டு பேசினார்.

இதில் நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் சோமசுந்தரம், ஆலத்தம்பாடி ஜானகி அண்ணி அரசு மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் அன்பழகன் மற்றும் மாணவர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்டவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னர், மாணவர்களுக்கு மரக்கன்று மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்ப ட்டன.

முடிவில் பாமணி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அந்தோணிசாமி நன்றி கூறினார்.

முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சக்கரபாணி செய்திருந்தார்.

Tags:    

Similar News