உள்ளூர் செய்திகள் (District)
சுவாமிமலை கோவிலில் சேவை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்- அர்ஜூன் சம்பத்
- சேவை கட்டண உயர்வை கண்டித்து மனு கொடுக்கும் போராட்டம்.
- மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் தரிசனம்.
சுவாமிமலை:
சுவாமிமலை சுவாமிநா தசாமி கோவிலில் தற்போது சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை திரும்ப பெற வேண்டும் எனவும், கட்டண உயர்வை கண்டித்தும் இந்து மக்கள் கட்சி சார்பில் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நேற்று சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் மனு கொடுக்கும் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மனுக்களை உண்டியலில் போட வரும்போது அறநிலைய த்துறை துணை ஆணையர் உமாதேவி, கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவ. செந்தி ல்குமார் ஆகியோர் கேட்டுக்கொ ண்டதற்கினங்க மனுக்களை அவர்கள் கைகளில் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.