உள்ளூர் செய்திகள்

சாலையில் பகலில் மரங்களை வெட்டுவதால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-08-18 10:38 GMT   |   Update On 2023-08-18 10:38 GMT
  • சாலையின் இருபுறமும் இருந்த அனைத்து புளிய மரங்களையும் அகற்றும் பணி தினமும் நடந்து வருகிறது.
  • பாதசாரிகள் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதால் விரைவில் இப்பணியை முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை நான்கு ரோட்டில் இருந்து பொத்தனூர் எம்.ஜி.ஆர்., சிலை வரை சாலையில் இரு புறமும் விரிவாக்க பணிக்காகவும் மற்றும் சாக்கடை வசதி அமைக்கும் பணிக்காகவும் சாலையின் இருபுறமும் இருந்த அனைத்து புளிய மரங்களையும் அகற்றும் பணி தினமும் நடந்து வருகிறது.இந்த சாலை பரமத்திவேலூரில் இருந்து பொத்தனூர். பாண்டமங்கலம். வெங்கரை. ஜேடர்பாளையம், சோழசிராமணி மற்றும் சோழசிராமணி வழியாக ஈரோடு செல்லும் முக்கிய சாலையாக திகழ்கிறது.

சுமார் 60-க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் மற்றும் இதர மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர். இப்பணி கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு காலை முதல் மாலை வரை மின்சாரமும் தினசரி தடை செய்து வருகின்றனர். தினசரி மின் வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். ஆமை வேகத்தில் நடக்கும் இந்த பணியால் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியை கடக்கும் பாதசாரிகள் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதால் விரைவில் இப்பணியை முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தினசரி மரங்களை வெட்டி நடுரோட்டில் சாய்த்து வருவதால் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகள்ம ணிக்கணக்கில் நின்று அந்த வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை தினமும் ஏற்பட்டு வருகிறது. எனவே மரங்களை வெட்டி அகற்றும் பணியை இரவு நேரத்தில் செய்து தங்கு தடை இன்றி வாகனங்கள் செல்ல வாகன ஓட்டிகளுக்கு உதவ வேண்டும். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News