உள்ளூர் செய்திகள் (District)
சாய்பாபா கோவில் கும்பாபிஷேக முதலாமாண்டு நிறைவு விழா
- கோ பூஜை, கணபதி ஹோமம், சாய் நாதரா, விசேஷ ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலை பாமணி ஊராட்சி சுந்தரபுரியில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேக முதலாமாண்டு நிறைவு விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காகட ஆர்த்தி, கோ பூஜை, கணபதி ஹோமம், சாய் நாதரா, விசேஷ ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர், பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
அதனை தொடர்ந்து பூர்ணாஹூதி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வழிபட்டனர்.
தொடர்ந்து, ரத்ததான முகாம் நடைபெற்றது.
இதில் மன்னார்குடி செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை தாளாளர் திவாகரன், ஸ்ரீராம் உலகரட்சகர் சீரடி சாய்பாபா அறக்கட்டளை தலைவர் கருணாநிதி, செயலாளர் ராஜேந்திரன், துணை தலைவர் ஆடிட்டர் ராகவன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்