உள்ளூர் செய்திகள்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மேலும் 4 நாட்கள் கன மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2022-10-10 07:36 GMT   |   Update On 2022-10-10 07:36 GMT
  • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
  • மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சேலம்:

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இலங்கையைெயாட்டி தென் மேற்கு வங்க கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 13-ந் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (10-ந் தேதி) முதல் வருகிற 13 -ந் தேதி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இதனா பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News