உள்ளூர் செய்திகள்

வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா

Published On 2023-10-08 09:15 GMT   |   Update On 2023-10-08 09:15 GMT
  • வெள்ளி கருட வாகனத்தில்ஸ்ரீதேவி, பூதேவியுடன் கோட்டை பெருமாள் வீதி விழா
  • உற்சவருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு திருவாராதனம் கண்டருளி பிரசாதம் வழங்கப்பட்டது.

சேலம்

சேலம் குகை திருப்பாவை கோவில் குழு சார்பில் 59-வது ஆண்டாக வெள்ளி கருட வாகனத்தில்ஸ்ரீதேவி, பூதேவியுடன் கோட்டை பெருமாள் வீதி விழா நிகழ்ச்சி நேற்று இரவு குகை பகுதியில் உள்ள சிவபாண்டு ரங்க பஜனை கோவில் மடாலயத்தில் நடைபெற்றது. முன்னதாக உற்சவருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு திருவாராதனம் கண்டருளி பிரசாதம் வழங்கப்பட்டது. இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலா குகை பகுதியின் முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் சிவபாண்டு ரங்க பஜனை கோவில் மடாலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை குகைத் திருப்பாவை குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News