உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கிய தாய், மகள் இறந்து கிடக்கும் காட்சி.

உத்தமசோழபுரம் அருகே மொபட் மீது கார் மோதி தாய் - மகள் பரிதாப சாவு

Published On 2023-06-06 09:36 GMT   |   Update On 2023-06-06 09:36 GMT
  • கோவையில் இருந்து சேலம் வரும் தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் 3 பேரும் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.
  • சேலம் நோக்கி வந்த சொகுசு கார், எதிர்பாராத விதமாக வெங்கடாசலம் ஓட்டி சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது.

சேலம்:

சேலம் அருகே உள்ள கல்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 70). இவர் இன்று காலை தனது மொபட்டில் மனைவி மாரியம்மாள் (60), மகள் பூங்கொடி (27) ஆகியோருடன் உத்தமசோழபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கோவையில் இருந்து சேலம் வரும் தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் 3 பேரும் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த சொகுசு கார், எதிர்பாராத விதமாக வெங்கடாசலம் ஓட்டி சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் மாரியம்மாள் மற்றும் பூங்கொடி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த வெங்கடாஜலம் உயிருக்கு போராடினார்.

அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள், வெங்கடாஜலத்தை மீட்டு அரியானூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்த தகவலின்பேரில், கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ரோட்டில் இறந்து கிடந்த மாரியம்மாள் மற்றும் பூங்கொடியின் உடல்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News