உள்ளூர் செய்திகள் (District)

ேபாலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 577 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

Published On 2023-08-11 09:27 GMT   |   Update On 2023-08-11 09:27 GMT
  • சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையால் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 577 கிலோ எடை உள்ள கஞ்சா நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருந்தது.
  • இதனை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் உயர் அலுவலர்கள் முன்னிலையில் போலீசார் தீயிட்டு அழித்தனர்.

எடப்பாடி:

சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையால் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 577 கிலோ எடை உள்ள கஞ்சா நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருந்தது.

இதனை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் உயர் அலுவலர்கள் முன்னிலையில் போலீசார் தீயிட்டு அழித்தனர்.

எடப்பாடி- சங்ககிரி பிரதான சாலையில் உள்ள மருத்துவக் கழிவு எரியூட்டும் நிலையத்தில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பவானிஸ்ரீ முன்னிலையில் சுமார் 577 கிலோ கஞ்சாவினை போலீசார் தீயிட்டு எரித்தனர்.

இந்நிகழ்வின்போது டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், திருப்பூர் மாநகர துணை ஆணையர் ஆசைத்தம்பி, சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News