உள்ளூர் செய்திகள்

பணியாளர், குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2023-07-06 07:44 GMT   |   Update On 2023-07-06 07:44 GMT
  • கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, போக்குவரத்துக் கழக பணியாளர்கள் விம்ஸ் மருத்துவமனை பங்களிப்புடன் ஜான்சன்பேட்டை கிளை வளாகத்தில் சிறப்பு மருத் துவ முகாம் நடைபெற்றது.
  • இதில் சுமார் 270-க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும், மற்றும் விம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினரும் பங்கேற்றனர்.

சேலம்:

கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, போக்குவரத்துக் கழக பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பி னர்களுக்கு விம்ஸ் மருத்து வமனை பங்களிப்புடன் ஜான்சன்பேட்டை கிளை வளாகத்தில் சிறப்பு மருத் துவ முகாம் நடைபெற்றது.

தொடர்ந்து இன்று ராம கிருஷ்ணா சாலையில் உள்ள தலைமை அலுவல கத்தில் சிறப்பு முகாம் நடை பெற்றது. முகாமில் போக்கு வரத்து கழக பணியாளர் களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டறியும் பரி சோதனை, இ.சி.ஜி. மற்றும் இ.சி.ஓ. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இதில் சுமார் 270-க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும், சேலம் மண்டல பொது மேலாளர், துணை மேலா ளர்கள், கோட்ட மேலாளர், உதவி மேலாளர்கள், அனைத்துத்துறை பணியா ளர்கள், தொழிற் சங்க பிரதிநிதிகள் மற்றும் விம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினரும் பங்கேற்றனர்.

முகாமை சேலம் மண்டல அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பொன் முடி தொடங்கி வைத்தார். நாளை(வெள்ளிக்கிழமை) நாமக்கல் கிளை வளாகத்தில் முகாம் நடைபெற உள்ளது. இந்தசிறப்பு மருத்துவ முகா மினை பயன்படுத்தி பணி யாளர்கள் தங்கள் உடல் நலனை காத்திடுமாறு நிர் வாக இயக்குநர் பொன்முடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News