உள்ளூர் செய்திகள் (District)

சேலம் சிறை வளாகத்தில் போலீஸ் துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த குண்டு

Published On 2023-05-18 07:22 GMT   |   Update On 2023-05-18 07:22 GMT
  • மணிகண்டன் (வயது 30). இவர் நேற்று கைதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல, சேலம் மத்திய சிறை வளாகத்துக்கு வந்தார்.
  • அங்குள்ள கேண்டீன் அருகே, 302 ரக துப்பாக்கியை வைத்துவிட்டு அருகில் நின்றிருந்தார்.

சேலம்:

சேலம் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரி பவர் மணிகண்டன் (வயது 30). இவர் நேற்று கைதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல, சேலம் மத்திய சிறை வளாகத்துக்கு வந்தார்.

குண்டு பாய்ந்தது

அங்குள்ள கேண்டீன் அருகே, 302 ரக துப்பாக்கியை வைத்துவிட்டு அருகில் நின்றிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து திடீரென குண்டு சீறி பாய்ந்தது.

இந்த குண்டு வானத்தின் மேல் நோக்கி சென்றதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. அதே நேரத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டு அங்கிருந்த பார்வையாளர்கள் மற்றும் போலீசார் அலறி அடித்து ஓடினர். அத்துடன் சிறையில் இருந்த கைதிகளும் பயத்தில் கூச்சலிட்டனர்.

விசாரணை

இது தொடர்பாக மணி கண்டனிடம் ஆயுதப்படை கூடுதல் துணை கமிஷனர் ரவிச்சந்திரன் நேற்று விசாரணை நடத்தினார். 2-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தப்படு கிறது. விசாரணை முடிவில், அவர் மீது கவனக்குறைவாக செயல்பட்டதாக நடவ டிக்கை எடுக்க வாய்ப்புள்ள தாக அதிகாரிகள் தெரி வித்தனர்.

Tags:    

Similar News