உள்ளூர் செய்திகள்

வாழப்பாடி அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல்

Published On 2022-06-06 09:01 GMT   |   Update On 2022-06-06 09:01 GMT
வாழப்பாடி அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம் மகன் கோகுல்நாத் (வயது 28). இவர் நேற்றுமுன்தினம் இரவு வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி பகுதியிலுள்ள தனியார் உணவகத்தில் குடும்பத்துடன் உணவு சாப்பிட்டுள்ளார்.

அப்போது, அங்கிருந்த மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், தங்கராஜ், சுங்கச்சாவடி பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ், ஜெகதீஸ் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து கோகுல்நாத்தை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து கோகுல்நாத் வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News