உள்ளூர் செய்திகள் (District)

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் விற்பனை மேளா

Published On 2022-11-16 09:10 GMT   |   Update On 2022-11-16 09:10 GMT
  • ஆவின் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் தயாரிப்பு பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
  • 20-ந்தேதி வரை நடைபெறும் எனவும்,

திருச்செங்கோடு:

69-ஆவது அனைத்திந்தி ய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கூட்டுறவு நிறுவன தயாரிப்பு பொருட்கள், ஆவின் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் தயாரிப்பு பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனை மேளாவினை திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க இணைப்பதிவாளர் விஜயசக்தி தொடங்கி வைத்தார். மண்டல இணைப்பதிவாளர் செல்வக்குமரன் விற்பனை மேளாவினைப் பார்வையிட்டார்.

இந்த விற்பனை மேளா வருகிற 20-ந்தேதி வரை நடைபெறும் எனவும், பொதுமக்கள் விற்பனை மேளா நடைபெறும் நாட்களில் பொருட்களைப் பெற்று பயனடையுமாறும் கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News