உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 49 கடைகளுக்கு 'சீல்' வைப்பு

Published On 2022-07-02 09:07 GMT   |   Update On 2022-07-02 09:07 GMT
  • கஞ்சா விற்பனை செய்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 37 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • குட்கா விற்பனை செய்ததாக 409 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 429 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி:

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக இந்த ஆண்டில் இதுவரை 66 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கஞ்சா விற்பனை

தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டில் இதுவரை சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 106 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 49.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

14 பேர் மீது குண்டர் சட்டம்

தொடர் கஞ்சா விற்பனை செய்ததாக இதுவரை 14 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கஞ்சா விற்பனை செய்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 37 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

409 வழக்கு

சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்ததாக 409 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 429 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2,340 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்களின் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் மூலம் ரூ. 2 லட்சத்து 95 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு 49 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி. எச்சரிக்கை

மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News