உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி விபத்தில் காவலாளி பலி
- ஆறுமுகத்துரை ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணி செய்து வந்தார்.
- மடத்தூர் சர்வீஸ் ரோட்டில் சென்றபோது அவ்வழியாக வந்த லாரி ஆறுமுகத்துரை மீது மோதியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகத்துரை (35). இவர் மதுரை பைபாஸ் ரோடு திருச்செந்தூர் ரவுண்டானா அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணி செய்து வந்தார்.நேற்று மாலை பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார். மடத்தூர் சர்வீஸ் ரோட்டில் சென்றபோது அவ்வழியாக வந்த லாரி ஆறுமுகத்துரை மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிப்காட் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஹென்சன் பவுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.