உள்ளூர் செய்திகள்

டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்த கருத்தரங்கம் நடந்தது.

திருவாரூரில், டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்த கருத்தரங்கம்

Published On 2023-03-08 06:59 GMT   |   Update On 2023-03-08 06:59 GMT
  • டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது ஒரு பணம் செலுத்தும் முறையாகும்.
  • இது பணம் செலுத்துவதற்கான உடனடி மற்றும் வசதியான வழியாகும்.

திருவாரூர்:

திருவாரூரில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் சென்னையை சேர்ந்த நுகர்வோர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் கீர்த்தனா தங்கவேல் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் டிஜிட்டல் பண பரிவர்த்த னையால் பணத்தை இழந்துபாதிக்க ப்பட்டவர்களுக்கு ஆலோ சனைகளும், வழிகாட்டு தல்களும் செய்யப்பட்டது.

கருத்தரங்கில், பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பின்னர் இந்தியாவில் ஒவ்வொரு நபரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வெவ்வேறு வழிகளை பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது ஒரு பணம் செலுத்தும் முறையாகும்.

இதில் பணம் செலுத்துபவர் மற்றும் பெறுபவர் இருவரும் டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தி பணத்தை அனுப்பவும், பெறவும் செய்கின்றனர்.

இது பணம் செலுத்துவதற்கான உடனடி மற்றும் வசதியான வழியாகும்.

இது தவிர, மோசடி பேர்வழிகளால் பொதுமக்கள் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனையில் ஏமாற்றப்படும்போது, சைபர் கிரைம் தடுப்பு அமைப்புகள் வழியாகவும் கண்டறிந்து பொதுமக்களுக்கு அரசு உதவி செய்து வருகிறது.

இதனை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த கருத்தரங்கில், டிஜிட்டல் பண பரிவர்த்தனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் செய்தால் செய்வதோடு நடவடிக்கை எடுக்க பரிந்து ரையும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News