உள்ளூர் செய்திகள் (District)

அ.தி.மு.க. சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும்- செந்தில்நாதன் எம்.எல்.ஏ.

Published On 2023-09-24 08:26 GMT   |   Update On 2023-09-24 08:26 GMT
  • அ.தி.மு.க. சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
  • கூட்டணி கட்சிகள் பங்கேற்க கூடாது என்பதற்காக அரசியல் செய்துள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கையில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவகங்கையில் ரெயில் மறியல் போராட்டம் போராட்டம் என்று எப்படி கூற முடியும்? சிதம்பரம் மத்திய அமைச்சராக பதவி வகித்தபோது விரைவு ெரயில்கள் சிவகங்கையில் நின்று செல்ல ஏன் நடவ டிக்கை எடுக்க வில்லை?

அனைத்து விரைவு ெரயில்களும் சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவ கங்கை வழியாக ராமேசு வரத்துக்கு வந்தே பாரத் ெரயில் இயக்க வேண்டும். அ.தி.மு.க. சார்பில் ெரயில்வே மண்டல மேலா ளரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் அ.தி.மு.க. சார்பில் தொடர் போராட் டம் நடத்துவோம்.

அ.தி.மு.க. கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்த போது, இண்டியா கூட்டணி சார் பில் நடத்தப்படுவதாக தெரிவித்து விட்டு அனைத்து கட்சி சார்பில் போராட்டம் என்று நோட்டீஸ் கொடுத் துள்ளனர். அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்க கூடாது என்பதற்காக அரசியல் செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News