உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

Published On 2022-08-13 08:35 GMT   |   Update On 2022-08-13 08:35 GMT
  • சிவகங்கையில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை நகரசபை தலைவர் வழங்கினார்.
  • சிவகங்கை செயின்ட்ஜோசப் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் ஏற்பாட்டில் நடந்தது.

சிவகங்கை

சிவகங்கை செயின்ட்ஜோசப் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் யோவல்மேரி ஏற்பாட்டில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் பள்ளி குழுத்தலைவர் தேவதாஸ், நகர் மன்ற துணைத் தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர்கள் ராமதாஸ், அயூப்கான், சரவணன், விஜயக்குமார், கார்த்திகேயன், தொழில்நுட்ப பிரிவு சதிஷ் குமார், பூமிராஜ், தமிழ்செல்வன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News