கருமலை சாத்த அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
- கருமலை சாத்த அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை கொன்னத்தான்பட்டி ஊர் பொதுமக்கள், கிராமத்து இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கொன்னத்தான்பட்டி கிராமத்தில் கருமலை சாத்த அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு 29 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி 3 நாட்கள் சிறப்பு ஹோமம் நடந்தது.
பின்னர் பரிகார தெய்வங்களுக்கு மகா பூர்ணாகுதி, தீப ஆராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார் ராமசாமி தலைமையில் கடம் புறப்பாடகி, கோவில் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவில் பூங்குன்ற நாட்டு அம்பலம் சண்முகம், கொன்னத்தான்பட்டி ஊர் அம்பலம், பழனியப்பா தேவர் என்ற விஜய், ஊராட்சித்மன்ற தலைவர் அழகு பாண்டியன், சின்ன அம்பலம் முத்தையா தேவர், பூசாரி கருப்பையா, சோலைமணி தேசிகர், கணேச வேளாளர், மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கொன்னத்தான்பட்டி ஊர் பொதுமக்கள், கிராமத்து இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.