அழகுநாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- கிருங்காகோட்டை அழகுநாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- விழா ஏற்பாடுகளை கிருங்காகோட்டை கிராம மக்கள் செய்திருந்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிருங்காகோட்டை கிராமத்தில் உள்ள அழகுநாச்சியம்மன் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா முதல் கால யாகபூஜையுடன் தொடங்கியது.
அதைதொடர்ந்து 2-ம் காலம், 3-ம் காலம் பூஜைகளுடன் யாகசாலையில் வைத்து பூஜை செய்த புனித கடம் தீர்த்தங்களுடன் புறப்பாடாகி கோவில் விமான கோபுரம் கும்ப கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீரை அபிஷேகம் செய்தனர். அதை தொடர்ந்து அழகுநாச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்க ளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தொழில் அதிபர் பச்சேரி சி.ஆர்.சுந்தரராஜன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். கும்பாபிஷேக விழாவை கான ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அழகுநாச்சியம்மனை வழிபாடு செய்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கிருங்காகோட்டை கிராம மக்கள் செய்திருந்தனர்.