உள்ளூர் செய்திகள் (District)

சிங்கம்புணரி அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் சாவு

Published On 2023-03-01 08:48 GMT   |   Update On 2023-03-01 08:48 GMT
  • சிங்கம்புணரி அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் பரிதாபமாக இறந்தார்.
  • இளங்கோவன் பிறவியில் இருந்தே ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் வேளார் தெருவில் வசிப்பவர் சுந்தர வடிவேலு(வயது52). இவரது மனைவி மாணிக்கவல்லி(50). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர்.

இந்தநிலையில் ஒரே மகனான இளங்கோவன் பிறவியில் இருந்தே ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று மாணிக்கவள்ளி சிகிச்சை அளித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம்(27-ந்தேதி) இளங்கோவன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மகன் திடீரென இறந்துவிட்டதால் மாணிக்கவள்ளி மிகுந்த மனவேதனை அடைந்தார். அவர் சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று இரவு மாணிக்க வள்ளியும் இறந்துவிட்டார். மகன் இறந்த துக்கத்தில் மறுநாளே தாயும் பலியான சம்பவம் சிங்கம்புணரி பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News