மாணவ-மாணவிகளுக்கு நோட்டு-ரொக்க பரிசு
- அரளிக்கோட்டையில் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு-ரொக்க பரிசுகளை அமைச்சர் வழங்கினார்.
- இந்த பள்ளி தொடங்கப்பட்டு 84 ஆண்டுகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரளிக்கோட்டையில் அமைந்துள்ள ஊராட்சி உயர்நிலைப்பள்ளியில் அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் அவரது தாய் தந்தை கருத்தான் - கருப்பாயி அம்மாள்நினைவாக அமைக்கப்பட்டுள்ள கல்வி அறக்கட்டளை சார்பில் அவரின் சொந்த நிதியில் இருந்து அந்த பள்ளியில் பயிலும் மாணவ -மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் 12-வது ஆண்டாக அந்த பள்ளியில் 10-ம் வகுப்பில் படித்து தேர்ச்சி பெற்று முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசு தொகையாக ரூ10 ஆயிரம் ரொக்க பரிசினையும், 2-வது பரிசு தொகையாக ரூ.5 ஆயிரம், 3-வது பரிசு தொகையாக ரூ. 3 ஆயிரம் வழங்கினார்.
மேலும் அந்த பள்ளியில் மாணவ-மாணவிகளின் வெற்றிக்கு பாடுபட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு கைக்கடிகாரத்தையும் அமைச்சர் வழங்கினார். இந்த பள்ளி தொடங்கப்பட்டு 84 ஆண்டுகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பள்ளியில் 10ம் வகுப்பு வரை பயின்று மேல்நிலைப் பள்ளியிலும் அதை தொடர்ந்து கல்லூரி படிப்புக்கு செல்லும் மாணவ- மாணவிகளுக்கு இந்த அறக்கட்டளை சார்பாக அவர்களின் கல்விக்கான செலவையும் ஏற்றுக் கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளரும், திருப்புவனம் பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன், மாவட்ட கல்வி அதிகாரி சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.