உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-07-27 08:37 GMT   |   Update On 2022-07-27 08:37 GMT
  • பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துெகாண்டார்.
  • எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை மேலரத வீதியை சேர்ந்தவர் சுடர்ராஜ் (வயது 52). இவரது மனைவி மேகலா. இவர்களது மகன் செல்வக்குமார் (17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கொரோனா ஊடங்கிற்கு செல்வக்குமார் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை சுடர்ராஜ் தனது மனைவியுடன் திருச்செந்தூர் அருகே உள்ள அவரது குல தெய்வ கோவிலுக்கு சென்றிருந்தார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த செல்வக்குமார் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. அக்கம்பக்கத்தினர் கதவை தட்டியும் பலனில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சாக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு தனி அறையில் செல்வக்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து உடனே ஊர் திரும்பிய சுடர்ராஜ்-மேகலா மகனின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. செல்வக்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News