வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டிய கலெக்டர்
- வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டி பரிசு வழங்கினார்.
- பாராட்டுச்சான்றிதழ்களை கலெக்டர் ஆஷாஅஜீத் வழங்கினார்.
சிவகங்கை
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், சிவகங்கை மாவட்டத்தில் அண்ணா, பெரியார் பிறந்த நாளையொட்டி பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன.
அண்ணா பிறந்த நாள் ேபச்சுப்போட்டியில் மரக்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஸ்ரீலக்ஜனா முதல் பரிசையும், சூராணம் புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி மோனிகாஸ்ரீ 2-வது பரிசையும், பூவந்தி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சிவதாரணி 3-ம் பரிசையும் பெற்றனர்.
அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு பரிசை சிவகங்கை மருது பாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி துர்காதேவி, திருக்கோஷ் டியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மகா லெட்சுமி ஆகியோர் பெற்றனர்.
பெரியார் பிறந்த நாள் பேச்சு போட்டியில் காரைக்குடி எல்.எப்.ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி மாணவர் முகிலேஸ்வரன் முதல் பரிசையும், தி.புதூர் ஆக்ஸ்வர்ட் பள்ளி மாணவி நவ்வி இளங்கொடி 2-வது பரிசையும், தேவகோட்டை புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சவுமியா 3-ம் பரிசையும் பெற்றனர்.
அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு பரிசினை மரக்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி கோபிகா, திருப்பத்தூர் நா.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹசினா ஆகியோர் பெற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவி களுக்கு முதல் பரிசு ரூ.5ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2ஆயிரம், சிறப்பு பரிசு ரூ.2ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை கலெக்டர் ஆஷாஅஜீத் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் நாகராசன், தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள் வெண்ணிலா, சிராஜுதீன், முனியசாமி, கார்த்திகை ஆகியோர் உடனிருந்தனர்.