உள்ளூர் செய்திகள்

குட்கா, லாட்டரி விற்ற 6 பேர் கைது

Published On 2023-07-17 09:16 GMT   |   Update On 2023-07-17 09:16 GMT
  • 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • அவர்களிடம் இருந்து ரூ.600 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.

அந்த வகையில் லாட்டரி விற்ற சிங்காரப்பேட்டை செந்தில்குமார் (45), குருபராத்பள்ளி முனுசாமி (70), கெலமங்கலம் முருகேஷ் (41) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.600 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா என பேலீசார் கண்காணித்தனர்.

அந்த வகையில் குட்கா விற்பனை செய்த வி.மாதேப்பள்ளி மூர்த்தி (38), இட்டிக்கல் அக்ரஹாரம் இளவரசன் (35), அட்டகுறுக்கி லோகேஷ் (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News