உள்ளூர் செய்திகள் (District)

திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

Published On 2023-03-03 09:47 GMT   |   Update On 2023-03-03 09:47 GMT
  • வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
  • கல்விச்சான்று, ஆதார் கார்டு ஆகிய நகல்களுடன் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரியில் நாளை (சனிக்கிழமை) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் பயனடையும் வகையில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தற்போது மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மூலம் நடைபெறும்.

இதில் 5-ம் வகுப்பு முதல் பிளஸ் 2, டிப்ளமோ, ஐடிஐ, பட்டப்படிப்பு முடித்து வேலை தேடும் இளைஞர்கள், இளம் பெண்கள் தங்களது சுயவிபர அறிக்கை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்று, ஆதார் கார்டு ஆகிய நகல்களுடன் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News