உள்ளூர் செய்திகள் (District)
திண்டுக்கல் அருகே குளத்தில் மீன்பிடிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
- குளத்தில் மீன்பிடிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கினர்.
- இதில் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்
திண்டுக்கல்:
திண்டுக்கல் புதுப்பட்டியை சேர்ந்த வீரமணி மகன் சர்வீன்(7), வீரமணி நகை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது உறவினர் கோவையை சேர்ந்த தங்கமணி. இவரது மகன் லத்திஸ்(7). இன்று திண்டுக்கல் அருகில் உள்ள முண்டியபட்டி கம்மாளபட்டியில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதற்காக தங்கமணி மற்றும் வீரமணி குடும்பத்தினர் வந்திருந்தனர். அங்கு விளையாடிக்கொண்டிருந்த லத்திஸ் மற்றும் சர்வீன் மீன்பிடிக்க சென்றனர். அப்போது திடீரென குளத்தில் மூழ்கினர்.
அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்க போராடினர். ஆனால் 2 சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.