உள்ளூர் செய்திகள் (District)

பொள்ளாச்சி அருகே குடிபோதையில் தந்தையை பீர் பாட்டிலால் குத்திய மகன் கைது

Published On 2023-05-28 09:19 GMT   |   Update On 2023-05-28 09:19 GMT
  • மாரிமுத்து குடிப்பதற்கு பணம் இல்லை என கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே குஞ்சிபாளையம் மதுரை வீரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது49). கூலி தொழிலாளி. இவரது மகன் முருகானந்தம் (29). இந்நிலையில் முருகானந்தத்திற்கு குடிபழக்கம் இருந்து வந்தது. இதனால் தினமும் அவர் மது குடித்து விட்டு, வீட்டிற்கு வந்து அவரது தந்தையுடன் தகராறு செய்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டிற்கு குடிபோதையில் வந்த முருகானந்தம், அவரது தந்தையிடம் குடிப்பதற்கு பணம் தரும்படி கேட்டார். ஆனால் அவர் என்னிடம் இப்போது பணம் இல்லை என கூறி மறுத்து விட்டார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த முருகானந்தம் தான் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து உடைத்து அவரது தந்தையை குத்தினார். இதில் காயம் அடைந்த அவர் வலியால் கத்தினார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அவர்கள் வருவதற்குள் முருகானந்தம் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து காயம் அடைந்த மாரிமுத்துவை 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அவர் பொள்ளாச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.

Tags:    

Similar News