சிறப்பு மருத்துவ முகாம்- சூரியனார்கோவில் ஆதீனம் தொடங்கி வைத்தார்
- முகாமில், இ.சி.ஜி. மற்றும் எக்கோ பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.
- ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இருதய நோய்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாமை சூரியனார்கோயில் ஆதீனகர்த்தர் தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் தனலெ ட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் குத்தாலம் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய இந்த முகாமில், இதய நோய், நுரையீரல் ரத்த அழுத்த நோய், இருதய தசைநார் நோய், பிறவி இருதய குறைபாடு மற்றும் இருதயம் தொடர்பான அனைத்து நோய்களுக்கு இலவச பரிசோதனை நடத்தப்பட்டது.
மேலும், முகாமில், இசிஜி மற்றும் எக்கோ பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ள ப்பட்டன.
இதில், சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு குத்துவிள க்கேற்றி முகாமை தொடங்கி வைத்து அருளாசி கூறினார்.
அவருக்கு நிர்வாகிகள் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.
முகாமில் முதியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதில், குத்தாலம் பேரூராட்சி மன்றத் தலைவர் சங்கீதா மாரியப்பன், பேரூராட்சி உறுப்பினர் சுகன்யா சுரேஷ், குத்தாலம் லயன்ஸ் சங்கத் தலைவர் மகாலிங்கம் மற்றும் சின்னதுரை,தனலட்சுமி சீனிவாசன் ஒருங்கிணைப்பாளர் அன்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.