உள்ளூர் செய்திகள் (District)

சிறப்பு மண் ஆய்வு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

கிராமத்தில் சிறப்பு மண் ஆய்வு முகாம்

Published On 2022-06-20 10:43 GMT   |   Update On 2022-06-20 10:43 GMT
  • வடகரையாத்துர் கிராமத்தில் சிறப்பு மண் ஆய்வு முகாம் நடைபெற்றது.
  • விவசாயிகளிடமிருந்து மண் மாதிரி மற்றும் நீர் மாதிரிகளை பெற்று தொடங்கி வைத்தனர்.

பரமத்திவேலூர், ஜூன்.20-

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள வடகரையாத்தூர் கிராமத்தில் சிறப்பு மண் ஆய்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் விவசாயிகளிடமிருந்து மண் மாதிரி மற்றும் நீர் மாதிரிகளை பெற்று கபிலர்மலை வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

நடப்பாண்டில் கபிலர்மலை வட்டாரத்தில் வடகரையாத்தூர், ஆனங்கூர், சுள்ளிபாளையம், சிறுநல்லிக்கோயில் ஆகிய கிராமங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் கட்ட முறையில் மண் மாதிரிகள் இறவை பாசன நிலங்களிலிருந்து 2.5 எக்டருக்கு ஒரு மண் மாதிரியும், மானாவாரி நிலங்களில் 10 ஏக்கருக்கு ஒரு மாதிரியும் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆகவே விவசாயிகள் தங்கள் நிலங்களில் இருந்து மண் மாதிரிகளை சேகரித்து அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களிடம் வழங்கிட வேண்டும்

முகாமில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு மண் மற்றும் நீர் மாதிரிகளை வழங்கி ஆய்வு செய்து ஆய்வு முடிவுகளை அன்றைய தினமே பெற்றனர். விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மண் மற்றும் நீர் மாதிரிகளை நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் சவுந்தர்ராஜன் , அருள்ராணி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ஜெயமணி ஆகியோர் ஆய்வு செய்து அதன் முடிவுகளை மண்வள அட்டையாக வழங்கினர். முகாம் ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஸ்ரீதர் செய்திருந்தார்.

Tags:    

Similar News