உள்ளூர் செய்திகள் (District)
- நீடாமங்கலம் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது
திருவாரூர்:
நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோவிலில் சஷ்டியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதனை முன்னிட்டு சஷ்டி யாகம் நடந்தது.அதனைத்தொடர்ந்து விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலதண்டாயுதம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.