உள்ளூர் செய்திகள்

மாவட்ட பொறுப்பாளர் கேசவன் தலைமையில் கூட்டம் நடந்த காட்சி.

உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் சிறப்பு வழிபாடு

Published On 2022-12-28 08:32 GMT   |   Update On 2022-12-28 08:32 GMT
  • இந்து அன்னையர் முன்னணி சார்பாக அயோத்தியில்ராமர் கோவில் கட்டும் பணி நல்லபடியாக நடக்க வேண்டும் என்றும்சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
  • நிகழ்ச்சியில் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடன்குடி:

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் உடன்குடி ஒன்றியம், திருச்செந்தூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள சுற்று புறபகுதியில் உள்ள 9 கிராமங்களில் இந்து அன்னையர் முன்னணி சார்பாக அயோத்தியில்ராமர் கோவில் கட்டும் பணியாளர்களுக்கு எந்த இடைஞ்சலும் வராமலும், ராமர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நல்லபடியாக நடக்க வேண்டும் என்றும், நல்ல கன மழை பொழிந்து ஆறு, குளங்கள் நிரம்ப வேண்டும் என்றும் 9 கிராமங்களில் கோவில்களில் வேண்டுதல் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

இதில் பொறுப்பாளர்கள் சூரியகலா, தமிழ்ச்செல்வி, யோகேஸ்வரி, அமுதசுரபி, வனசுந்தரி, செல்வகுமாரி, அமுதா, சுஜாதா, கோகிலா, பட்டு ரோஜா, சரஸ்வதி, சுதா, செல்வி, தமிழரசி, தங்கச் செல்வி, முத்துலட்சுமி, முருகம்மாள், சித்திரை கனி, பாரதிகோபிகா, இசக்கியம்மாள், இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச்செயலாளரும் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர்கள் கேசவன் மற்றும் சதீஷ் ரகு, இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News