உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் மாணவர் அமைப்பு ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-06 08:55 GMT   |   Update On 2023-06-06 08:55 GMT
  • மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
  • 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் திடலில் இந்திய மாணவர் கூட்டமைப்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவை சார்பில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த பாஜக எம்.பி பிரிட்ஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரியும், நீதி கேட்டு போராடிய வீராங்கனைகளை தாக்கிய டெல்லி போலீசாரைகண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அப்போது மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் யோகராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மணிகண்டன், இடைகமிட்டி தலைவர் சுகந்தன் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News