உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் அருகே ஆம்புலன்சிற்கு வழி விடாமல் சென்ற லோடு ஆட்டோவிற்கு ரூ.11 ஆயிரம் அபராதம்

Published On 2023-02-21 05:25 GMT   |   Update On 2023-02-21 05:25 GMT
  • 108 ஆம்புலன்ஸ் வில்லுக்குறி பகுதியை தாண்டி நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது.
  • ஆம்புலன்ஸ் டிரைவர் லோடு ஆட்டோவை முந்தி செல்ல பலமுறை முயன்ற போதும் லோடு ஆட்டோவின் டிரைவர் வழிவிடாமல் சென்றார்.

நாகர்கோவில்:

புலியூர்குறிச்சி-வில்லுக் குறி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரவு 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 வாலிபர்கள் கால் எலும்பு முறிந்து படுகாயமடைந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.படுகாயம் அடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

108 ஆம்புலன்ஸ் வில்லுக்குறி பகுதியை தாண்டி நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லோடு ஆட்டோவை ஓட்டி சென்ற டிரைவர் ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் சென்றார். ஆம்புலன்ஸ் டிரைவர் லோடு ஆட்டோவை முந்தி செல்ல பலமுறை முயன்ற போதும் லோடு ஆட்டோவின் டிரைவர் வழிவிடாமல் சென்றார். சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்கு காட்டிய படி சென்றுள்ளார்.

இதை ஆம்புலன்சில் இருந்த ஊழியர் வீடியோவாக பதிவு செய்து குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி வைத்தனர். வீடியோவை பார்த்த போக்குவரத்து ஆய்வாளர் உடனடியாக லோடு ஆட்டோ டிரைவர் மீது நடவடிக்கை எடுத்தார். லோடு ஆட்டோவிற்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. லோடு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் அய்யப்பன் மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி விடாமல் போக்கு காட்டும் வாகன ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்களை ஏற்றி சென்ற 108 ஆம்புலன்ஸ்க்கு லோடு ஆட்டோ டிரைவர் வழி விடாமல் போக்கு காட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News