உள்ளூர் செய்திகள் (District)

கொருக்குப்பேட்டையில் மீன்பாடி வண்டியில் தூங்கியவரை கொல்ல முயன்ற 2 பேர் கைது

Published On 2023-05-13 06:41 GMT   |   Update On 2023-05-13 06:41 GMT
  • தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் பென்சில் பேக்டரி பஸ் நிலையத்தில் மீன்பாடி வண்டியில் தூங்கி கொண்டிருந்தார்.
  • கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

சென்னை:

தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (38) என்பவர் பென்சில் பேக்டரி பஸ் நிலையத்தில் மீன்பாடி வண்டியில் தூங்கி கொண்டிருந்தார். முன்விரோதம் காரணமாக அவரை வினோத்குமார், பாபுலால் ஆகியோர் தண்டவாளம் பக்கமாக இழுத்து சென்று கல்லால் தாக்கினர். அவரை கொலை செய்ய முயற்சி செய்து பின்னர் அங்கிருந்து ஓடி விட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் சுரேஷ்குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கொருக்குப்பேட்டை மீனாம்பாள் மேம்பாலத்திற்கு கீழே நின்ற வினோத்குமார், பாபுலால் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News