உள்ளூர் செய்திகள் (District)

திருமுல்லைவாயலில் நர்சு வீட்டில் 70 பவுன் நகை திருடிய பிரபல திருடன் கைது

Published On 2023-05-24 06:38 GMT   |   Update On 2023-05-24 06:38 GMT
  • கைதான பாலமுருகன் மீது சென்னை அம்பத்தூர் புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.
  • திருட்டு வழக்கில் கைதாகி சிறை சென்று வெளியே வந்த மறுநாளே அவன் திருமுல்லைவாயல் பகுதியில் நர்சு வீட்டில் கைவரிசை காட்டி சிக்கி உள்ளான்.

திருநின்றவூர்:

திருமுல்லைவாயல், சோழம்பேடு கண்ணன் தியேட்டர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முருகத்தாய். இவர், ஈ.எஸ். ஐ. அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைபார்த்து வருகிறார். கடந்த 10-ந்தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான கோவில்பட்டிக்கு தனது தாயின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டான்.

இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்த போது நர்சு வீட்டில் கைவரிசை காட்டியது, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஓட்டை பாலா என்கிற பாலமுருகன் என்பது தெரிந்தது. அவனை சவுகார்பேட்டை அருகே நகையை விற்க முயன்ற போது போலீசார் கைது செய்தனர்.

கைதான பாலமுருகன் மீது சென்னை அம்பத்தூர் புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. திருட்டு வழக்கில் கைதாகி சிறை சென்று வெளியே வந்த மறுநாளே அவன் திருமுல்லைவாயல் பகுதியில் நர்சு வீட்டில் கைவரிசை காட்டி சிக்கி உள்ளான்.

கொள்ளையடித்த நகைகளை விற்று ஊத்துக்கோட்டை அருகே உள்ள கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. அவனிடம் இருந்து 57 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பாலமுருகனை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News