உள்ளூர் செய்திகள் (District)

மழை வெள்ள பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீர்காழியில் நாளை நேரில் ஆய்வு

Published On 2022-11-13 07:55 GMT   |   Update On 2022-11-13 07:55 GMT
  • சீர்காழி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் மயிலாடுதுறை, கடலூர் பகுதிகளிலும் மழைநீர் வடியாமல் தேங்கி கிடப்பதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
  • மழை பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் சென்று பார்வையிட உள்ளார்.

சென்னை:

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சீர்காழியில் நேற்றிரவு 44 செ.மீ அளவுக்கு மழை பெய்ததால் அந்த நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.

சீர்காழி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் மயிலாடுதுறை, கடலூர் பகுதிகளிலும் மழைநீர் வடியாமல் தேங்கி கிடப்பதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இந்த பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் சென்று பார்வையிட உள்ளார். இதுபற்றி இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

மழை பாதிப்புகளை பார்வையிட இன்றிரவு சீர்காழி புறப்பட்டு செல்கிறேன். நாளை சீர்காழி, மயிலாடுதுறை, கடலூர் போன்ற பகுதிகளை பார்வையிட உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News