மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தேசிய மாதர் சம்மேளனத்தினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
- ஒரு பகுதியாக மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- அமைதியை நிலை நாட்ட வலியுறுத்தி காந்தி சிலையிடம் மனு அளித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
திருப்பூர்:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக பழங்குடியின பெண்கள் 2பேரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பல்வேறு தரப்பினரும் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இச்சம்பவத்திற்கு காரணமான மணிப்பூரில் ஆளும் பா.ஜ.க. அரசு பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக உள்ள காந்தி சிலை முன் அனைத்திந்திய மாதர் சம்மேளனத்தினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அமைதியை நிலை நாட்ட வலியுறுத்தி காந்தி சிலையிடம் மனு அளித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.