உள்ளூர் செய்திகள் (District)

வேப்பந்தட்டை அருகே கூட்டுறவு வங்கியில் செயலாளர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-10-16 07:46 GMT   |   Update On 2023-10-16 07:46 GMT
  • பணிக்கு வந்த ஊழியர்கள் வங்கியின் உள்ளே கணபதி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
  • கணபதி தற்கொலைக்கு குடும்ப பிரச்சனை காரணமா? அல்லது உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது54). இவர் அதே ஊரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கூடுதல் செயலாளராக உள்ளார். இவருக்கு சரசுவதி (45) என்ற மனைவியும், அருண்குமார் (17) ராஜவிக்னேஷ் (8) ஆகிய மகன்களூம் உள்ளனர்.

இன்று காலை கணபதி வழக்கம்போல வங்கிக்கு வேலைக்கு சென்றார். பணியில் இருந்த அவர் வங்கு அலுவலகத்தின் உள்ளேயே திடீரென்று விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் அவர் பரிதாபமாக இறந்தார்.

அங்கு பணிக்கு வந்த ஊழியர்கள் வங்கியின் உள்ளே கணபதி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கணபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கணபதி தற்கொலைக்கு குடும்ப பிரச்சனை காரணமா? அல்லது உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கியில் செயலாளர் விஷம் குடித்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News