உள்ளூர் செய்திகள்

எண்ணூரில் பக்கத்து வீட்டில் நகை திருடிய பெண் கைது

Published On 2023-07-14 08:27 GMT   |   Update On 2023-07-14 08:27 GMT
  • சந்தேகம் அடைந்த கீர்த்தனா எண்ணூர் போலீசில் புகார் செய்தார்.
  • பக்கத்துவீட்டில் வசிக்கும் அழகுநிலையத்தில் வேலைபார்த்து வரும் ஜான்சிராணி என்பவர் நகை திருடியது தெரிந்தது.

எண்ணூர், சிவன் படை வீதி பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்தனா. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இவரது வீட்டில் இருந்த 7 பவுன் நகை மாயமாகி இருந்தது. ஆனால் பீரோ உடைக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கீர்த்தனா எண்ணூர் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் சுதாகர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது பக்கத்துவீட்டில் வசிக்கும் அழகுநிலையத்தில் வேலைபார்த்து வரும் ஜான்சிராணி (34) என்பவர் நகை திருடியது தெரிந்தது. அவர் அங்குள்ள சகோதரி ஒருவரை பார்க்க வருவதை போல் நடித்து பூட்டிய வீட்டின் அருகில் வைக்கப்பட்டு இருந்து சாவியை எடுத்து நகையை திருடி சென்று இருப்பது தெரிந்து.

இதேபோல் அருகில் உள்ள பால்ராஜ் என்பவரது வீட்டிலும் 28 பவுன் நகையை ஜான்சிராணி சுருட்டி உள்ளார். அங்கு கண்காணிப்பு கேமரா இல்லாததால் சிக்காமல் இருந்தார். அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள.

Tags:    

Similar News