உள்ளூர் செய்திகள் (District)

கடலூரில் லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து- 12 பயணிகள் காயம்

Published On 2024-09-28 09:35 GMT   |   Update On 2024-09-28 09:35 GMT
  • விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • விபத்தால் கடலூர்-சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடலூர்:

சென்னையில் இருந்து நேற்று இரவு அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலூர் வழியாக காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்தது.

நள்ளிரவில் கடலூர் முதுநகர் அடுத்த பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு பகுதியில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அரசு பஸ் முன்னதாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று லாரி டிரைவர் பிரேக் போட்டதால் பின்னால் வந்த அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராமல் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறியடித்தனர். இதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சென்னை தி.நகரை சேர்ந்த நவஜோதி (வயது64), சுஜாதா (15), கூடுவாஞ்சேரியை சேர்ந்த ஈஸ்வரி (64) காரைக்காலை சேர்ந்த கார்த்திக் (34), மாதவரத்தை சேர்ந்த ஆண்டாள் (60), புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த செல்வம் (64) உள்பட 12 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றனர்.

இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தால் கடலூர்-சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Tags:    

Similar News