உள்ளூர் செய்திகள் (District)

கூடுவாஞ்சேரியில் லாரி மோதி தொழிலாளி பலி

Published On 2023-07-09 06:32 GMT   |   Update On 2023-07-09 06:32 GMT
  • பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
  • விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வண்டலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், திம்மச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்(வயது25). கட்டிட மேஸ்திரி. இவர் இன்று காலை செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரான ஆந்திராவை சேர்ந்த போனு சீனிவாசன்(38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News