உள்ளூர் செய்திகள் (District)

ஓசூர் அருகே தனியார் நிறுவன உரிமையாளரை கத்தியால் வெட்டிய தொழிலாளி கைது

Published On 2023-04-24 08:46 GMT   |   Update On 2023-04-24 08:46 GMT
  • மாதேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேஷ்குமார் கையை வெட்டினார்.
  • ராஜேஷ் குமார் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியை அடுத்த சின்ன எலத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 34). இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன தொழிலாளியான மாதேஷ் (48) என்பவர் அதிக சத்தத்துடன் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்றார். இதேபோன்று நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ராஜேஷ்குமார் குடியிருக்கும் பகுதியில் மாதேஷ் மீண்டு, மீண்டும் பலமுறை மோட்டார் சைக்கிளை சத்தத்துடன் ஓடி சென்றார்.

இதுகுறித்து ராஜேஷ் குமார் அவரிடம் சென்று ஏன் இவ்வாறு மோட்டார் சைக்கிளை இரவு நேரத்தில் இப்படி ஓட்டி செல்கிறாய் என்று தட்டி கேட்டார்.

இதனால் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது மாதேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேஷ்குமார் கையை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் வலியால் அலறினார். உடனே மாதேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து ராஜேஷ் குமார் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாதேஷை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News